கல்லறைக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தி மேட்டுப்பாளையம் கிறிஸ்துவ சபைகளின் உறுப்பினர்கள் ஆட்சியரிடம் மனு

கோவை : மேட்டுப்பாளையம் வட்டத்தைச் சேர்ந்த பெந்தகோஸ்தே கிறிஸ்துவ சபைகளின் உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

கோவை : மேட்டுப்பாளையம் வட்டத்தைச் சேர்ந்த பெந்தகோஸ்தே கிறிஸ்துவ சபைகளின் உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ சபைகளில் 5,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். சபை சம்பந்தப்பட்ட போதகர்கள் சபை நடத்தி வருகின்றனர். வருமான நோக்கின்றி செயல்படும் சபைக்கு உறுப்பினர்களின் அளிக்கும் பங்களிப்பு மூலமும், அவர்கள் வழங்கும் காணிக்கைகள் ஜீவியம் செய்து வருகிறோம். சபைகளின் உறுப்பினர்கள் மரணமடைந்தால், இதுவரை சி.எஸ்.ஐ. நிர்வாகத்திடம் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இடபற்றாக்குறை காரணமாகவும், கிறிஸ்துவ ஆலயங்கள் அதிகம் உள்ளதால், ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் சடலங்களை புதைக்க தடை விதித்து சி.எஸ்.ஐ. நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதால், சபை உறுப்பினர்கள் அல்லாதவர்களை அடக்கம் செய்ய இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மேட்டுப்பாளையம் பகுதியில் கல்லறை அமைக்க ஒரு ஏக்கர் நிலம் வழங்கி உதவிட வேண்டும், இவ்வாறு கிறிஸ்துவ சபைகளின் போதகர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...