உதகையில் வரும் 31-ம் தேதி மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு குறித்த தேசிய கருத்தரங்கு : ஆளுநர் தொடங்கி வைக்கிறார்

நீலகிரி : விவசாயிகளுக்கு சாதகமான மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்த இந்திய மண் வள பாதுகாப்பு சங்கத்தின் 28-வது தேசிய கருத்தரங்கு முதன்முறையாக உதகையில் வரும் 31ம் தேதி தொடங்குகிறது.

நீலகிரி : விவசாயிகளுக்கு சாதகமான மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்த இந்திய மண் வள பாதுகாப்பு சங்கத்தின் 28-வது தேசிய கருத்தரங்கு முதன்முறையாக உதகையில் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. 

இது குறித்து முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன் கூறியதாவது :- நீலகிரி மாவட்டம் உதகையில் இயங்கி வரும் இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், இந்தியாவின் வேளாண் வளர்ச்சி மற்றும் அதன் உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நிலையில், நீர் வளங்களுக்கு முக்கிய பாங்காற்றி வரும் காலநிலையானது, வழக்கத்தை விட தற்போது கடுமையாக மாற்றமடைந்துள்ளதால், நீர் வளங்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 



இதனைப் பாதுகாக்க மண் அரிப்பை குறைத்தல், சீரழிந்த நிலங்களை புனரமைத்தல், மண் ஈரப்பதத்தை தக்க வைத்தல் மற்றும் பயிர்களின் விளைச்சலை அதிகரித்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தொழில்நுட்பங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த செயல்பாடுகளை முன்னிறுத்தி வரும் 31-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை உதகையில் இயங்கி வரும் இந்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு நிறுவனம், டெல்லியில் இயங்கி வரும் இந்திய மண் வள பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில இந்திய மண் வள பாதுகாப்பு சங்கம் ஆகியோர் இணைந்து 28-வது தேசிய கருத்தரங்கு நடத்துகிறது. இத்தேசிய கருத்தரங்கின் குறிக்கோளானது, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கும் விவசாயிகளுக்கு சாதகமான மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் நடைபெறுகிறது. 

இக்கருத்தரங்கை வரும் 31-ம் தேதி உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்து, நாட்டில் சிறந்த 25 விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கவுள்ளார், இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...