கோவை : மாநகர எல்லைக்குள் வீடுகள் ஒதுக்கி தரக்கோரி வி.கே.கே.மேனன் குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வந்த பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : மாநகர எல்லைக்குள் வீடுகள் ஒதுக்கி தரக்கோரி வி.கே.கே.மேனன் குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வந்த பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளில் ஏராளமானோர் வசித்து வந்தனர். இந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆன நிலையில், இடியும் தருவாயில் இருந்ததால், அங்கு வசித்தவர்கள் அப்புறப்படுத்தி, அதற்கு மாற்றாக கீரணத்தம் பகுதியில் வீடுகள் கட்டி தரப்பட்டது. இங்கு 360 நபர்களுக்கு வீடுகள் ஒதுக்கி தரப்பட்ட நிலையில், அங்கு வீடுகள் ஒதுக்கி தரப்பட்டவர்கள், கீரணத்தம் பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்றும், பெரும்பாலானோர் மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களாக வேலை செய்து வருவதால் குறித்த நேரத்திற்குப் பணிக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்படுவதாக தெரிவித்தனர்.

மேலும், தங்களது குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வர போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமல் சிரமப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குடிசை மாற்று வாரிய வீட்டில் வசித்து வந்த தங்களுக்கு, கோவை மாநகர எல்லைக்குள் வீடுகள் ஒதுக்கி தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளில் ஏராளமானோர் வசித்து வந்தனர். இந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆன நிலையில், இடியும் தருவாயில் இருந்ததால், அங்கு வசித்தவர்கள் அப்புறப்படுத்தி, அதற்கு மாற்றாக கீரணத்தம் பகுதியில் வீடுகள் கட்டி தரப்பட்டது. இங்கு 360 நபர்களுக்கு வீடுகள் ஒதுக்கி தரப்பட்ட நிலையில், அங்கு வீடுகள் ஒதுக்கி தரப்பட்டவர்கள், கீரணத்தம் பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்றும், பெரும்பாலானோர் மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களாக வேலை செய்து வருவதால் குறித்த நேரத்திற்குப் பணிக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்படுவதாக தெரிவித்தனர்.

மேலும், தங்களது குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வர போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமல் சிரமப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குடிசை மாற்று வாரிய வீட்டில் வசித்து வந்த தங்களுக்கு, கோவை மாநகர எல்லைக்குள் வீடுகள் ஒதுக்கி தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.