நீலகிரி : முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் ஓடும் மாயாற்றில் முதலை உலா வருவதால், அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
நீலகிரி : முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் ஓடும் மாயாற்றில் முதலை உலா வருவதால், அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
நீலகிரி மாவட்டம் புலிகள் காப்பக வனத்தின் மத்தியில் மாயாறு செல்கிறது. மாயாற்றில் ‘மக்கர் குரோக்கடைல்’ எனப்படும் ஆற்று நீர் முதலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. நீலகிரியில் உள்ள சீரான தட்பவெப்ப நிலைக்கு இவை வாழும் தன்மை கொண்டதால், இவ்வகை முதலைகள் மாயாற்றில் காணப்படுகின்றன. தற்போது, வெயிலான காலநிலை இப்பகுதியில் நிலவுவதால், மாயாற்றின் கரையோர பகுதிகளில் உள்ள பாறைகளில் இவற்றைக் காண முடிகிறது.
முதலை நடமாட்டம் இருப்பதால், மாயாற்று பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் குளிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.