கோத்தகிரியில் இரண்டாம் போக காய்கறி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் 2-ம் போக காய்கறி சாகுபடியில் ஈடுபட மும்முரம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் 2-ம் போக காய்கறி சாகுபடியில் ஈடுபட மும்முரம் காட்டி வருகின்றனர்.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக் காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான விளைநிலங்கள் மற்றும் குத்தகைக்கு எடுத்துள்ள நிலங்களில், கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், கா-பிளவர், முள்ளங்கி, மேரக்காய், பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைக் காய்கறிகளையும், ஒஸ் பெர்க், சுகுனி, சல்லாரை, புரூக்கோ உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.



இந்த நிலையில், இரண்டாம் போகத்திற்காக விவசாயப் பணிகளை விவசாயிகள் தற்போது தொடங்கி உள்ளனர். இதையொட்டி, விளைநிலங்களை உழுது நிலத்தைப் பதப்படுத்தி வருகின்றனர். மேலும், இயற்கை உரங்களை லாரிகள் மூலம் கொண்டு வந்து, தங்களது விளைநிலங்களுக்கு இடும் பணியிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். விளை நிலங்களில் அறுவடை செய்யாமல் ஓருசில இடங்களில் காணப்படும் காய்கறிகளை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், காய்கறி சாகுபடி அதிகரிக்கவும், மண்ணின் வளம் பாதிக்காமல் இருக்கவும் ரசாயன உரங்கள் இடுவதை பெரும்பாலும் தவிர்த்து, இயற்கை உரத்தை வாங்கி மண்ணுடன் கலந்து வருகின்றனர். ஒரு லோடு இயற்கை சாண உரத்தை ரூ. 22,000 வரை திம்பம் பகுதியில் இருந்தும், உள்ளூரில் இருந்தும் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...