திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் அகற்றப்பட்ட தீண்டாமை வேலியில் ஒரு புறம் நுழைவு வாயில் அமைக்கும் பணியினை முற்றுகையிட்டு போராட்ட குழுவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் அகற்றப்பட்ட தீண்டாமை வேலியில் ஒரு புறம் நுழைவு வாயில் அமைக்கும் பணியினை முற்றுகையிட்டு போராட்ட குழுவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அலகுமலை கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவில் வழியாக அப்பகுதியினர் குடிநீர் எடுத்துச்செல்லவும் குழந்தைகளை அழைத்துச்செல்லவும் பாதையாக இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம், அவர்களின் வழித்தடத்தை மறித்து கம்பிவேலி அமைக்கப்பட்டது. இதனை அப்பகுதி பொதுமக்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, கம்பிவேலியில் ஒரு பகுதி அகற்றப்பட்டு அப்பகுதியினருக்குப் பாதை அமைக்கப்பட்டது.

இருப்பினும், கம்பிவேலியை முழுவதுமாக அகற்றவேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், கம்பிவேலி அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் பொதுமக்களின் வழித்தடத்தை மறைக்கும் வகையில் நுழைவுவாயில் அமைக்க இன்று காலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்களுடன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் போராட்டத்தில் ஈடுபட்டது.
அப்போது, தோண்டப்பட்ட குழியினை மூட முயற்சித்த அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட பின் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டம் அலகுமலை கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவில் வழியாக அப்பகுதியினர் குடிநீர் எடுத்துச்செல்லவும் குழந்தைகளை அழைத்துச்செல்லவும் பாதையாக இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம், அவர்களின் வழித்தடத்தை மறித்து கம்பிவேலி அமைக்கப்பட்டது. இதனை அப்பகுதி பொதுமக்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, கம்பிவேலியில் ஒரு பகுதி அகற்றப்பட்டு அப்பகுதியினருக்குப் பாதை அமைக்கப்பட்டது.

இருப்பினும், கம்பிவேலியை முழுவதுமாக அகற்றவேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், கம்பிவேலி அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் பொதுமக்களின் வழித்தடத்தை மறைக்கும் வகையில் நுழைவுவாயில் அமைக்க இன்று காலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்களுடன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் போராட்டத்தில் ஈடுபட்டது.
அப்போது, தோண்டப்பட்ட குழியினை மூட முயற்சித்த அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட பின் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு வருகிறது.