உதகையில் 7-வது நாளாக ஜாக்டோ - ஜியோ போராட்டம் : 300-க்கும் மேற்பட்டோர் கைது

நீலகிரி : பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட 9 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி உதகையில் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி : பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட 9 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி உதகையில் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.



புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய 21 மாத நிலுவை தொகையை ஜனவரி 2016 முதல் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒருவாரமாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், 7-வது நாளாக இன்று உதகை ஏ.டி.சி. பகுதியில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த சாலைமறியல் போராட்டத்தால், முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா, சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, வெகுநேரம் சுற்றுலாப் பயணிகள் சாலையில் காத்திருந்தனர். இதையடுத்து, அனுமதியின்றி சாலைமறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...