கோவை : ஆனைகட்டி அருகே யானை தாக்கியதில் குடிபோதையில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை : ஆனைகட்டி அருகே யானை தாக்கியதில் குடிபோதையில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கனிவழி பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் பி. முருகன் (40). இவர் மதுபானம் மற்றும் கஞ்சாப் பொருட்களை உட்கொண்டுவிட்டு, நேற்றிரவு தனது மனைவியின் சொந்த ஊரான பனப்பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த காட்டு யானை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடல் ஆனைக்கட்டியில் உள்ள நகமாரா ஓடையின் அருகே கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக, முருகனின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோல, தடாகம் பகுதியில் பிரச்சனைக்குரிய யானைகள் எனக் கருதப்பட்ட விநாயகன், சின்னத்தம்பி ஆகியவற்றை இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், பூச்சியூர் அருகே நேற்றிரவு 2 பேர் காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்தனர். ஹைடெக் சிட்டி வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, செந்தில்குமார் (41), மனோஜ் கார்த்திக் (31) ஆகியோர் ஆபத்தான நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கனிவழி பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் பி. முருகன் (40). இவர் மதுபானம் மற்றும் கஞ்சாப் பொருட்களை உட்கொண்டுவிட்டு, நேற்றிரவு தனது மனைவியின் சொந்த ஊரான பனப்பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த காட்டு யானை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடல் ஆனைக்கட்டியில் உள்ள நகமாரா ஓடையின் அருகே கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக, முருகனின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோல, தடாகம் பகுதியில் பிரச்சனைக்குரிய யானைகள் எனக் கருதப்பட்ட விநாயகன், சின்னத்தம்பி ஆகியவற்றை இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், பூச்சியூர் அருகே நேற்றிரவு 2 பேர் காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்தனர். ஹைடெக் சிட்டி வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, செந்தில்குமார் (41), மனோஜ் கார்த்திக் (31) ஆகியோர் ஆபத்தான நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.