கோவை : ஆர்.எஸ்.புரம் அருகே ஓய்வுபெற்ற மின் ஊழியர் வீட்டில் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்த விபத்தில், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை : ஆர்.எஸ்.புரம் அருகே ஓய்வுபெற்ற மின் ஊழியர் வீட்டில் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்த விபத்தில், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் சின்னராஜ்(58), தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டின் கீழ்தளத்தில் சின்னராஜூம், மேல்தளத்தில் அவரது மகன் மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், சின்னராஜ் வீட்டின் சமையலறையில் உள்ள சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதையறியாமல், இன்று அதிகாலை வழக்கம்போல, பால் வாங்கி விட்டு வீட்டுக்கு வந்த சின்னராஜ், உள்ளே நுழைந்து லைட்டை போட்டுள்ளார். அப்போது, கேஸ் கசிவு ஏற்பட்ட நிலையில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் சின்னராஜ் படுகாயம் அடைந்தார்.
மேலும், வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ், ஃபேன் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமடைந்தன. வெடிசத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள், உடனடியாக விரைந்து சென்று உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சின்னராஜை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.