மாணவர்களின் நலனுக்காக ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் : செங்கோட்டையன் வேண்டுகோள்

கோவை : மாணவர்களின் நலனுக்காக ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்புமாறு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை : மாணவர்களின் நலனுக்காக ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்புமாறு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள சிக்கதாசம்பாளையத்தில் செயல்படும் தனியார் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.



அப்போது, விளையாட்டு மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது :- தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளின் கல்வி தரம் உயர்ந்து வருகிறது. நீட் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில், அதற்கேற்றவாறு பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு முடித்தாலே வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் கல்வித்துறையில் செயல்படுத்தி வருகிறோம், எனக் கூறினார். 

நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஆசிரியர்கள் போராட்டம் நியாயமற்றது. குறிப்பாக, ஏழை, எளிய மாணவர்கள் நலனுக்காகப் போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். இதனைத்தான் அரசு மட்டுமின்றி பொதுமக்கள், நீதிமன்றம் என அனைவரும் விரும்புகின்றனர். எனவே, போராட்டத்தைக் கைவிட்டு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...