குடியரசு தினத்தன்று சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட 49 பேர் கைது : 504 மதுபாட்டில்கள் பறிமுதல்

கோவை : குடியரசு தினத்தன்று சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 49 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து 504 மதுபாட்டில்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை : குடியரசு தினத்தன்று சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 49 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து 504 மதுபாட்டில்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் குடியரசு தின விழாவிற்கு ஜனவரி 26-ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். அதேபோல கடந்த சனிக்கிழமை மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்கவும், மது விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்யவும் மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதில், மதுக்கடைகளுக்கு அருகே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்றதாக மாநகரில் 27 பேரும், மாவட்ட பகுதியில் 22 பேரும் என மொத்தம் 49 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 504 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...