கோவை : சிங்காநல்லூர் அருகே சாலையோரத்தில் படுத்த படுக்கையாக நோயுற்று இருந்த முதியவரை, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கோவை : சிங்காநல்லூர் அருகே சாலையோரத்தில் படுத்த படுக்கையாக நோயுற்று இருந்த முதியவரை, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கோவை, சிங்காநல்லூரில் உள்ள தியாகி சண்முகா நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக முதியவர் ஒருவர் சாலையின் ஓரத்தில் படுத்த படுக்கையாகக் கிடந்துள்ளார். இந்நிலையில், நேற்று முதியவரின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து, அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலரான ஆத்மா அறக்கட்டளை நிறுவனர் சரவணனுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து, உடனடியாக வந்த சரவணன் அந்த முதியவருக்கு முதலுதவி கொடுத்தார். பின்னர் முதியவரை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சாலையில் கிடக்கும் உயிர்களைப் பலபேர் கடந்து சென்றாலும் ஒரு சிலர் இதுபோன்று மனித நேயத்துடன் உதவி செய்வது பாராட்டுக்குரியது.
கோவை, சிங்காநல்லூரில் உள்ள தியாகி சண்முகா நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக முதியவர் ஒருவர் சாலையின் ஓரத்தில் படுத்த படுக்கையாகக் கிடந்துள்ளார். இந்நிலையில், நேற்று முதியவரின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து, அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலரான ஆத்மா அறக்கட்டளை நிறுவனர் சரவணனுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து, உடனடியாக வந்த சரவணன் அந்த முதியவருக்கு முதலுதவி கொடுத்தார். பின்னர் முதியவரை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சாலையில் கிடக்கும் உயிர்களைப் பலபேர் கடந்து சென்றாலும் ஒரு சிலர் இதுபோன்று மனித நேயத்துடன் உதவி செய்வது பாராட்டுக்குரியது.