கொடிசியா தொழிற்பூங்கா கட்டுமானப்பணிகள் வரும் பிப்,. 6ம் தேதி தொடக்கப்படும் : அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவிப்பு

கோவை : கோவையில் 400 ஏக்கர் பரப்பளவில் கொடிசியா தொழிற்பூங்கா அமைக்கும் பணிகள் வரும் பிப்ரவரி மாதம் பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோரால் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.


கோவை : கோவையில் 400 ஏக்கர் பரப்பளவில் கொடிசியா தொழிற்பூங்கா அமைக்கும் பணிகள் வரும் பிப்ரவரி மாதம் பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோரால் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார். 

கோவை கொடிசியா தொழிற்பூங்காவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சியை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி தொடங்கி வைத்தார். 



இந்த விழாவில் அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர். இதில், இன்ட் டெக்ஸ்போ என்ற தலைப்பில், வாங்குவோர், விற்போருக்கு இடையேயான வர்த்தக சந்திப்பு நடைபெற்றது. இக்கண்காட்சியில் மாநிலம் முழுவதும் உள்ள ஸ்பின்னிங், கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை, பட்டு என, ஜவுளித்துறையின் பல்வேறு பிரிவுகளை சார்ந்தோர், தங்கள் தயாரிப்புகளை 400 அரங்குகளில் அமைத்துக் காட்சிப்படுத்தினர். 



இந்நிகழ்ச்சியில் ஜவுளித்துறை அமைச்சர் பேசும் போது, தமிழகத்தில் ஜவுளித்துறைக்கு அதிகளவு பங்களிப்பு அளிக்கப்படுகிறது. இந்த கண்காட்சி தமிழ்நாட்டினுடைய ஜவுளிகளின் சிறப்பம்சத்தை வெளிப்படுத்த மட்டுமில்லாமல், ஏற்றுமதியை அதிகரிக்கவும் மற்றும் மாநிலத்தின் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாகவும் நடத்தப்படுகிறது என்றார். இதையடுத்து, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சில கோரிக்கைகளை முன் வைத்தார். அதில், திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள பின்னலாடைத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கான தங்குமிடம் மற்றும் விற்பனை சந்தையில் பருத்தியின் விலையை சமநிலையில் வைக்கவும் கோரினார். 



இதனைத் தொடர்ந்து பேசிய செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர், மோப்பிரிப்பாளையத்தில், கொடிசியா தொழிற்பூங்காவின் கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி பிப்ரவரி 6 -ம் தேதி தொடங்கி வைக்கின்றனர். இதனால், 25000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இது சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும்," 



மேலும், இந்நிகழ்ச்சியில் ஜவுளித்துறை அமைச்சர் ஜவுளித்துறையில் உள்ள சிறப்பு திட்டங்கள் பற்றியும், அதன் இன்றியமையா தேவை குறித்தும் பேசினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...