மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்படும் : கோவையில் வைகோ திட்டவட்டம்

கோவை : மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு ம.தி.மு.க., சார்பில் கருப்பு காட்டும் போராட்டம் நடத்தப்படுமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை : மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு ம.தி.மு.க., சார்பில் கருப்பு காட்டும் போராட்டம் நடத்தப்படுமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ம.தி.மு.க., அலுவலகத்தில் வைகோ செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- நாளை மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு ம.தி.மு.க., சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதை ம.தி.மு.க., எதிர்க்கவில்லை. ஆனால், மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக செயல்படுவதைக் கண்டித்து கருப்புக் கொடி காட்டப்படும். மேலும், நஞ்சு வைத்த உணவில் தேன் வைப்பது போல, மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கிறது. 

முல்லைப் பெரியாறு, மேகதாது அணை, நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவற்றிக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்தத் திட்டங்களினால் பொருளாதாரம் உயரும் என்றாலும், தமிழகம் அழிந்து விடும். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையாக வாதாடவில்லை. தனது வாதத்தினால்தான் உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளிக்கவில்லை, எனக் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...