தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் : தமிழக காங்., தேர்தல் பொறுப்பாளர் நம்பிக்கை

நீலகிரி : நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நீலகிரி : நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 



நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்களவை தேர்தலுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி, காங்கிரஸ் கட்சின் மாவட்ட தலைவரும், உதகை சட்டப்பேரவை உறுப்பினருமான கணேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய் தத் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது :- தமிழகத்தில் ஆளும் கட்சி ஊழல் நிறைந்த கட்சியாக உள்ளது. வரும் மக்களவை தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்கள் மீளுவதற்கு, மோடி அரசை வீட்டிற்கு அனுப்பி விட்டு, ராகுல் தலைமையிலான அரசை நாட்டிற்கு தர வேண்டும், என்றார்/

இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் காங்கிரஸ் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஜே.பி.சுப்ரமணி, குன்னூர் நகர தலைவர் லாரன்ஸ், வட்டார தலைவர்கள் சுப்ரமணி, பாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், காங்கிரஸ் கட்சியினருக்கு தேர்தலை எதிர்கொள்ளும் அணுகுமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...