கோவை : தமிழக அரசின் கூடுதல் செயலாளர் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகள் கோவை ஈஷா யோகா மையத்தில் 5 நாட்கள் தங்கி யோகா கற்றுக்கொண்டனர்.
கோவை : தமிழக அரசின் கூடுதல் செயலாளர் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகள் கோவை ஈஷா யோகா மையத்தில் 5 நாட்கள் தங்கி யோகா கற்றுக்கொண்டனர்.

சாதி, மதம், இனம், மொழி என எவ்வித பாகுபாடும் இன்றி ‘யோகா’ என்னும் உள்நிலை தொழில்நுட்பக் கருவியை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஈஷா யோகா மையம் வழங்கி வருகிறது. குறிப்பாக, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் வருகை தந்து யோகா கற்று செல்கின்றனர். மேலும், பொதுமக்கள் மட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்களும் யோகா கற்பதற்காக ஈஷாவுக்கு வருகின்றனர்.
அதன்படி, தமிழகம், கர்நாடகா, இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 44 ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகள், கடந்த 21-ம் தேதி முதல் நேற்று தேதி வரை கோவை ஈஷா யோகா மையத்தில் தங்கி யோகா கற்றுக் கொண்டனர். இதில், தமிழ்நாடு கூடுதல் செயலாளர் ஒட்டம்டாய், சிம்லா தலைமை செயலாளர் திரு.பிரிஜ் குமார் அகர்வால், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையரகத்தின் தலைவர் சஞ்சீவ் ரஞ்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கு ‘ஷாம்பவி மஹாமுத்ரா’ என்ற சக்தி வாய்ந்த தியானம் மற்றும் யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. யோகாவுடன் சேர்த்து தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பங்கேற்று, அரசு நிர்வாகத்தை சிறப்பாக நிர்வகிப்பது குறித்து பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார்.

சாதி, மதம், இனம், மொழி என எவ்வித பாகுபாடும் இன்றி ‘யோகா’ என்னும் உள்நிலை தொழில்நுட்பக் கருவியை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஈஷா யோகா மையம் வழங்கி வருகிறது. குறிப்பாக, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் வருகை தந்து யோகா கற்று செல்கின்றனர். மேலும், பொதுமக்கள் மட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்களும் யோகா கற்பதற்காக ஈஷாவுக்கு வருகின்றனர்.
அதன்படி, தமிழகம், கர்நாடகா, இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 44 ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகள், கடந்த 21-ம் தேதி முதல் நேற்று தேதி வரை கோவை ஈஷா யோகா மையத்தில் தங்கி யோகா கற்றுக் கொண்டனர். இதில், தமிழ்நாடு கூடுதல் செயலாளர் ஒட்டம்டாய், சிம்லா தலைமை செயலாளர் திரு.பிரிஜ் குமார் அகர்வால், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையரகத்தின் தலைவர் சஞ்சீவ் ரஞ்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கு ‘ஷாம்பவி மஹாமுத்ரா’ என்ற சக்தி வாய்ந்த தியானம் மற்றும் யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. யோகாவுடன் சேர்த்து தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பங்கேற்று, அரசு நிர்வாகத்தை சிறப்பாக நிர்வகிப்பது குறித்து பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார்.