பனிப்பொழிவு காரணமாக நீலகிரியில் கடந்த 3 மாதத்தில் ரூ. 135 கோடி இழப்பு

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் கடும் பனிப்பொழிவால், தேயிலை செடிகள் கருகி, 135 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உபாசி வேளாண் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் கடும் பனிப்பொழிவால், தேயிலை செடிகள் கருகி, 135 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உபாசி வேளாண் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரியில் கடந்த நான்கு ஆண்டுகளை விட நடப்பாண்டு பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக உள்ளதால், செடிகள், விவசாய பயிர்கள், புல்வெளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பசுந்தேயிலை செடிகள் அதிகளவில் கருகியுள்ளன. உதகை, குன்னுார், குந்தா, கோத்தகிரி பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியசுக்கு குறைவாக உள்ளது. இதனால், தேயிலை தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை வரத்து குறைந்து வருகிறது. 

இது குறித்து குன்னுார் உபாசி வேளாண் ஆராய்ச்சி மைய துணை இயக்குநர் கூறும்போது :- பனிப் பொழிவால், ஒரு ஏக்கருக்கு 600 கிலோ வரை தேயிலை வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு கிலோவுக்கு ரூ. 15 கிடைக்கும் நிலையில், கடந்த 3 மாதத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ. 9,000 இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 15 ஆயிரம் ஏக்கரில் தேயிலை செடிகள் கருகியுள்ளதால், மொத்த உற்பத்தியில் ரூ. 135 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. 



விவசாயிகள் கருகிய இலைகளைக் கத்திரி மூலம் அகற்ற வேண்டும். 15 நாட்கள் விட்டு 'சிங்க்' உரமிட வேண்டும். புதிய அரும்பு வளரும் போது தாய் இலைகளை எடுக்க வேண்டும். பனிக்குப் பிறகு வரும் அரும்பு மிகவும் தரமுள்ளதாக இருக்கும். எனவே, விவசாயிகள் செடிகளை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...