நீலகிரி : நாட்டின் 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசிய கொடியை ஏற்றினார்.
நீலகிரி : நாட்டின் 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசிய கொடியை ஏற்றினார்.

நாடு முழுவதும் இன்று 70-வது குடியரசு தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசிய கொடியேற்றி, காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் ரூ. 29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர், காவல்துறை, தீயணைப்பத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதக்கங்கள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, மண்ணின் மைந்தர்கள் என்றழைக்கப்படும் தோடர், கோத்தர், இருளர் ஆகியோர்களின் பாரம்பரிய இசை நடனம், சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக்களையும் வெகுவாகக் கவர்ந்தது.
குறிப்பாக, அனைத்து மாவட்டங்களிலும் காலை 8.00 மணிக்கு தேசிய கொடியேற்றுவது வழக்கம். நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் குளிர் அதிகரித்து காணப்படுவதைத் தொடர்ந்து, காலை 10.00 மணிக்குத் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டு, சுமார் 4 மணிநேரம் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


நாடு முழுவதும் இன்று 70-வது குடியரசு தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசிய கொடியேற்றி, காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் ரூ. 29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர், காவல்துறை, தீயணைப்பத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதக்கங்கள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, மண்ணின் மைந்தர்கள் என்றழைக்கப்படும் தோடர், கோத்தர், இருளர் ஆகியோர்களின் பாரம்பரிய இசை நடனம், சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக்களையும் வெகுவாகக் கவர்ந்தது.
குறிப்பாக, அனைத்து மாவட்டங்களிலும் காலை 8.00 மணிக்கு தேசிய கொடியேற்றுவது வழக்கம். நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் குளிர் அதிகரித்து காணப்படுவதைத் தொடர்ந்து, காலை 10.00 மணிக்குத் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டு, சுமார் 4 மணிநேரம் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
