தொடர்ந்து 8 மணிநேரம் ஓவியம் வரையும் 14 வயது சிறுமியின் சாதனை முயற்சிக்குக் குவியும் பாராட்டு

திருப்பூர் : திருப்பூரில் தொடர்ந்து 8 மணிநேரம் ஓவியங்கள் வரையும் 14 வயது சிறுமியின் சாதனை முயற்சிக்கு பாராட்டுயை மேற்கொண்டு வருகிறார்.


திருப்பூர் : திருப்பூரில் தொடர்ந்து 8 மணிநேரம் ஓவியங்கள் வரையும் 14 வயது சிறுமியின் சாதனை முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.



திருப்பூரில் 'பியான்ட் டே புக்ஸ்' எனும் அமைப்பு ஆண்டுதோறும் ஜூனியர் பிகாசோ என்ற ஓவியம் வரையும் போட்டிகளை நடத்தி வருகிறது. 3-வது ஆண்டாக திருப்பூர் வளையங்காடு பகுதியில் தனியார் மண்டபத்தில் இந்த ஓவியப் போட்டியில் நடைபெற்றது. இதில், ஜான்வி காந்தி என்ற 14 வயது சிறுமி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, தொடர்ந்து 8 மணிநேரம் ஓவியங்கள் வரையும் சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளார். 



கார்டூன் ஓவியங்கள், 2டி ஓவியங்கள், டூடுல் ஓவியங்கள், மாடர்ன் ஓவியங்கள் என ஒவ்வொரு ஓவியத்திற்கும், சுமார் 3 நிமிடங்கள் முதல் 5 நிமிடங்கள் வரை 70 முதல் 100 ஓவியங்கள் வரைய திட்டமிடப்பட்டுள்ளது. ஓவியங்கள் அனைத்தும் பென்சில், வாட்டர் கலர், மெழுகு வண்ணங்கள், கரி வண்ணங்கள், அக்ரெலிக் வண்ணங்கள் கொண்டு வரையப்படுகிறது. ஓவியம் வரையும் வீடியோ பதிவுகளை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட், வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட் பதிவுக்கு அனுப்பப்படும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். 

மேலும், இந்த அரங்கில் சிறுவர், சிறுமியர்களுக்கு ஓவியம் வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டிகளும் நடைபெறுகிறது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...