கோவை : இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் சட்டவிரோதமாக தங்கம் கடத்திய சம்பவத்தில் 2 விமான நிறுவன ஊழியர்கள் உள்பட 5 பேரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர்.
கோவை : இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் சட்டவிரோதமாக தங்கம் கடத்திய சம்பவத்தில் 2 விமான நிறுவன ஊழியர்கள் உள்பட 5 பேரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர்.
கொழும்புவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு ஸ்ரீலன்கன் ஏர்லைன்ஸ் யூ.எல்-193 என்ற விமானம் வந்திறங்கியது. விமானத்தைவிட்டு இறங்கி வந்த பயணிகளிடம் கோவை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சையத் அபுதாஹீர் என்ற பயணியிடமும், அவருக்கு உதவிய விமான ஊழியர்கள் மனோஜ், சதீஷ் ஆகியோரிடம் இருந்து சுமார் 1.6 கிலோ எடையுள்ள 24 கேரட் மதிப்புள்ள 16 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 55 லட்சமாகும்.
இதைத் தொடர்ந்து, விமான ஊழியர்களான மனோஜ், சதீஷ், பயணி சையத் மற்றும் இந்தக் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய திருச்சியைச் சேர்ந்த டி. ராஜா மற்றும் அவரது ஓட்டுநரை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர், அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேலும், அதிகாரிகளின் விசாரணையில், இந்தக் கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி பைனான்சியர் மிஷ்ரா எனத் தெரிய வந்தது.
இதனிடையே, இந்த தங்கத்தை பெறுவதற்காக கோவை விமான நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் காத்திருந்த நபரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
கொழும்புவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு ஸ்ரீலன்கன் ஏர்லைன்ஸ் யூ.எல்-193 என்ற விமானம் வந்திறங்கியது. விமானத்தைவிட்டு இறங்கி வந்த பயணிகளிடம் கோவை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சையத் அபுதாஹீர் என்ற பயணியிடமும், அவருக்கு உதவிய விமான ஊழியர்கள் மனோஜ், சதீஷ் ஆகியோரிடம் இருந்து சுமார் 1.6 கிலோ எடையுள்ள 24 கேரட் மதிப்புள்ள 16 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 55 லட்சமாகும்.
இதைத் தொடர்ந்து, விமான ஊழியர்களான மனோஜ், சதீஷ், பயணி சையத் மற்றும் இந்தக் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய திருச்சியைச் சேர்ந்த டி. ராஜா மற்றும் அவரது ஓட்டுநரை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர், அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேலும், அதிகாரிகளின் விசாரணையில், இந்தக் கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி பைனான்சியர் மிஷ்ரா எனத் தெரிய வந்தது.
இதனிடையே, இந்த தங்கத்தை பெறுவதற்காக கோவை விமான நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் காத்திருந்த நபரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.