கோவை : சிங்காநல்லூரில் பாதாள சாக்கடையின் விஷவாயு தாக்கிய சம்பவத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
கோவை : சிங்காநல்லூரில் பாதாள சாக்கடையின் விஷவாயு தாக்கிய சம்பவத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
சிங்காநல்லூர் குடியிருப்பு திருநகர் குடியிருப்போர் நலச்சங்க கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பினை சரிசெய்யும் பணியில், அந்தக் குடியிருப்பு சங்கத்தினர், மாநகராட்சி அனுமதியின்றி இருவரை ஈடுபடுத்தியது. அப்போது, பாதாள சாக்கடையின் விஷவாயு தாக்கியதில் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து, மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் தடைச்சட்டம் 2013-ன்படி, உயிரிழந்த முருகன் (37), பாண்டித்துரை (29) ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் ஐயம்மாள், கீர்த்தனா ஆகியோரிடம் தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை மாநகராட்சி நிதியிலிருந்து, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், வி.சி. ஆறுக்குட்டி, பி.கஸ்தூரிவாசு, காவல் ஆணையாளர் சுமித் சரண், மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், மாநகராட்சி துணை ஆணையாளர் ப.காந்திமதி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சிங்காநல்லூர் குடியிருப்பு திருநகர் குடியிருப்போர் நலச்சங்க கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பினை சரிசெய்யும் பணியில், அந்தக் குடியிருப்பு சங்கத்தினர், மாநகராட்சி அனுமதியின்றி இருவரை ஈடுபடுத்தியது. அப்போது, பாதாள சாக்கடையின் விஷவாயு தாக்கியதில் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து, மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் தடைச்சட்டம் 2013-ன்படி, உயிரிழந்த முருகன் (37), பாண்டித்துரை (29) ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் ஐயம்மாள், கீர்த்தனா ஆகியோரிடம் தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை மாநகராட்சி நிதியிலிருந்து, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், வி.சி. ஆறுக்குட்டி, பி.கஸ்தூரிவாசு, காவல் ஆணையாளர் சுமித் சரண், மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், மாநகராட்சி துணை ஆணையாளர் ப.காந்திமதி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.