திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் தேசியகொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருப்பூர் : 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய கொடியை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருப்பூர் : 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய கொடியை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் குடியரசு தின நிகழ்ச்சிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில், மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி பங்கேற்று, தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், வருவாய்த்துறை, வேளாண்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 245 பயனாளிகளுக்கு 63 லட்சத்து 6 ஆயிரத்து 346 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி வழங்கினார். 



அதேபோல, 95 போலீசாருக்கு சிறந்த காவலர்களுக்கான முதலமைச்சர் விருது உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டதோடு, தியாகிகளும் கவுரவிக்கப்பட்டனர். இதையடுத்து, பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...