கோவை : மேட்டுப்பாளையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
கோவை : மேட்டுப்பாளையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வரும் குடியரசு தினத்தையொட்டி, மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதன் பின்னர், காவல்நிலையத்தில் இருந்து என்பீல்ட் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. 100-க்கும் மேற்பட்ட புல்லெட் வாகனத்தில் தேசிய கொடியினை கட்டியபடி, மேட்டுப்பாளையம் ராயல் என்பீல்ட் ரைடர்கள், போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் ஹெல்மெட் அணிந்தபடி நகரத்தின் முக்கிய வீதிகள் வழியே வாகனப் பேரணி நடத்தினர்.
100-க்கும் மேற்பட்ட புல்லெட் வாகனத்தில் தேசிய கொடியினை கட்டியபடி மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் ஹெல்மெட் அணிந்தபடி நகரத்தின் முக்கிய வீதிகள் வழியே வாகனப் பேரணி நடத்தினர்.
இதன் பின்னர் மேட்டுப்பாளையம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் காரமடை, வீரபாண்டிப்பிரிவு வழியே சுமார் 25 கிலோ மீட்டர் வரை பயணித்து பெரியநாயக்கன்பாளையம் வரை இந்த போலீஸ் வாகனப் பேரணி நடைபெற்றது.