கோவை : வாடிக்கையாளர் பெயரில் போலியான கணக்கு தொடங்கி, ரூ. 26 லட்சம் மோசடி செய்த கோவையைச் சேர்ந்த பிரபல வங்கியின் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவை : வாடிக்கையாளர் பெயரில் போலியான கணக்கு தொடங்கி, ரூ. 26 லட்சம் மோசடி செய்த கோவையைச் சேர்ந்த பிரபல வங்கியின் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
காளப்பட்டியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை முன்பு ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் என்ற பிரிவு செயல்பட்டு வந்தது. அப்போது, அந்த வங்கியில் கிளை மேலாளராகப் பணியாற்றி வந்த ஜோசையா பங்குலூரி என்பவர் வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல், அவர்கள் பெயரில் கூடுதல் கணக்கு தொடங்கி, அதில் ரூ.17 லட்சம் பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளார். இந்த விவகாரம் தெரிந்ததைத் தொடர்ந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, கோவை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் மண்டல மேலாளர் ஜோசப் கிருஷ்டி, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரணிடம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி புகார் மனு அளித்திருந்தார்.
அதனடிப்படையில், காவல் ஆணையர் சுமித்சரண், குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் உத்தரவின் பேரில், மாநகர குற்றப்பிரிவு போலீசார் ஜோசையா பங்குலூரி மீது மோசடி பிரிவின் கீழ் வழக்குப் பதிந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த அவர் தலைமறைவானார். இந்த நிலையில், ஆந்திரா மாநிலம் நெல்லூரில் தலைமறைவாக இருந்த ஜோசையா பங்குலூரியை கடந்த வியாழக்கிழமை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை கோவை மாநகர குற்றப்பிரிவிற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில், வாடிக்கையாளர் பெயரிலும், வங்கிக் கணக்கில் இருந்தும் ரூ.26 லட்சம் வரை பணத்தை மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் ஜோசையா பங்குலூரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
காளப்பட்டியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை முன்பு ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் என்ற பிரிவு செயல்பட்டு வந்தது. அப்போது, அந்த வங்கியில் கிளை மேலாளராகப் பணியாற்றி வந்த ஜோசையா பங்குலூரி என்பவர் வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல், அவர்கள் பெயரில் கூடுதல் கணக்கு தொடங்கி, அதில் ரூ.17 லட்சம் பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளார். இந்த விவகாரம் தெரிந்ததைத் தொடர்ந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, கோவை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் மண்டல மேலாளர் ஜோசப் கிருஷ்டி, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரணிடம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி புகார் மனு அளித்திருந்தார்.
அதனடிப்படையில், காவல் ஆணையர் சுமித்சரண், குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் உத்தரவின் பேரில், மாநகர குற்றப்பிரிவு போலீசார் ஜோசையா பங்குலூரி மீது மோசடி பிரிவின் கீழ் வழக்குப் பதிந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த அவர் தலைமறைவானார். இந்த நிலையில், ஆந்திரா மாநிலம் நெல்லூரில் தலைமறைவாக இருந்த ஜோசையா பங்குலூரியை கடந்த வியாழக்கிழமை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை கோவை மாநகர குற்றப்பிரிவிற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில், வாடிக்கையாளர் பெயரிலும், வங்கிக் கணக்கில் இருந்தும் ரூ.26 லட்சம் வரை பணத்தை மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் ஜோசையா பங்குலூரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.