கோவை : போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களுக்கு நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களின் ஊதியத்தை ரூ.10,000-ஆக பள்ளிக் கல்வித்துறை அதிகரித்துள்ளது.
கோவை : போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களுக்கு நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களின் ஊதியத்தை ரூ.10,000-ஆக பள்ளிக் கல்வித்துறை அதிகரித்துள்ளது.
தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் நடவடிக்கை மற்றும் சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் சார்பில் 4-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆசிரியர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், பல மாவட்டங்களில் 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதனிடையே, அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இருப்பினும், போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு 17-பி பிரிவின் கீழ் பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. ரூ. 7,000 தொகுப்பு ஊதியத்திற்கு ஆசிரியர்களை நியமிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், 4வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தின் காரணமாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. மேலும், அவர்களுக்கான ஊதியத்தை ரூ.7,000-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் நடவடிக்கை மற்றும் சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் சார்பில் 4-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆசிரியர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், பல மாவட்டங்களில் 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதனிடையே, அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இருப்பினும், போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு 17-பி பிரிவின் கீழ் பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. ரூ. 7,000 தொகுப்பு ஊதியத்திற்கு ஆசிரியர்களை நியமிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், 4வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தின் காரணமாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. மேலும், அவர்களுக்கான ஊதியத்தை ரூ.7,000-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.