பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அஜித் ரசிகர்கள் கண்டனம்

திருப்பூர் : திருப்பூரில் 4 அஜித் ரசிகர்கள் பா.ஜ.க.,வில் இணைந்த நிகழ்வை, விளம்பர நோக்கில் 2,000 பேர் என தெரிவித்ததாகக் கூறி பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அஜித் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் : திருப்பூரில் 4 அஜித் ரசிகர்கள் பா.ஜ.க.,வில் இணைந்த நிகழ்வை, விளம்பர நோக்கில் 2,000 பேர் என தெரிவித்ததாகக் கூறி பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அஜித் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக கலைக்கப்பட்ட திருப்பூர் மாவட்ட தலைமை அஜித்குமார் ரசிகர்கள் நற்பணி இயக்கத்தின் தலைவர் பொன்.ராசுக்குட்டி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- விஸ்வாசம் படத்தின் முதல்நாள் ரசிகர் காட்சிக்கான டிக்கெட் பிரச்சனையில் பா.ஜ.க. பிரமுகர் உதவிய காரணத்தினாலேயே, ஹரி அஜித் பா.ஜகவில் இணைந்தார். அன்றைய நிகழ்வில், 4 பேர் மட்டுமே பா.ஜ.க.வில் இணைந்தனர். ஆனால், 2,000 அஜித் ரசிகர்கள் இணைந்ததாக விளம்பரம் தேடும் நோக்கில், தமிழிசை சவுந்தரராஜன் அபாண்டமாக தெரிவித்துள்ளார். 



கட்சியை வளர்க்க ஆயிரம் வழிகள் உள்ள நிலையில், அஜித் பெயரை பயன்படுத்தியதற்கு அஜித் ரசிகர்கள் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ.க.,வில் இருந்து அழைப்பு வந்தாலும், அஜித் ரசிகர்கள் யாரும் செல்ல மாட்டார்கள், எனக் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...