கோவை : வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோவை : வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், 18 வயது பூர்த்தி அடைந்த ஒவ்வோரு குடிமகனும், தனது ஜனநாயக கடமையை செய்ய வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையத்தில் உள்ள கோப்ரட்டீவ் காலனியில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியை மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் புனிதா தொடங்கி வைத்தார். சுமார் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறுச் சென்று, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்தப் பேரணி, மேட்டுப்பாளையத்தில் உள்ள கோவை சாலை, உதகை சாலை என முக்கிய சாலைகளின் வழியே வலம் வந்தது.

அப்போது, ஜனநாயக கடமையை ஒவ்வோரு குடிமகனும் நாட்டிற்கு செய்ய கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். ஒரு கிலோ மீட்டர் வரை நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் பேருந்து நிலையத்தில் நிறைவுற்றது.

வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், 18 வயது பூர்த்தி அடைந்த ஒவ்வோரு குடிமகனும், தனது ஜனநாயக கடமையை செய்ய வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையத்தில் உள்ள கோப்ரட்டீவ் காலனியில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியை மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் புனிதா தொடங்கி வைத்தார். சுமார் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறுச் சென்று, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்தப் பேரணி, மேட்டுப்பாளையத்தில் உள்ள கோவை சாலை, உதகை சாலை என முக்கிய சாலைகளின் வழியே வலம் வந்தது.

அப்போது, ஜனநாயக கடமையை ஒவ்வோரு குடிமகனும் நாட்டிற்கு செய்ய கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். ஒரு கிலோ மீட்டர் வரை நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் பேருந்து நிலையத்தில் நிறைவுற்றது.