கோவை : அரசின் மானிய விலை இருசக்கர வாகனத்தைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை : அரசின் மானிய விலை இருசக்கர வாகனத்தைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேலைக்கு செல்லும் பெண்கள் ‘இருசக்கர வாகனம்’ வாங்கிக்கொள்ள ரூ. 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அந்தத் திட்டத்தை ‘அம்மா இருசக்கர வாகன திட்டம்’ என்ற பெயரில் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் மண்டல அலுவலகங்களில் வினியோகிக்கப்பட்டது.
இந்த நிலையில், கோவையில் பணிபுரியும் மகளிருக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ், மானியத்துடன் கூடிய வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலைக்கு செல்லும் பெண்கள் ‘இருசக்கர வாகனம்’ வாங்கிக்கொள்ள ரூ. 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அந்தத் திட்டத்தை ‘அம்மா இருசக்கர வாகன திட்டம்’ என்ற பெயரில் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் மண்டல அலுவலகங்களில் வினியோகிக்கப்பட்டது.
இந்த நிலையில், கோவையில் பணிபுரியும் மகளிருக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ், மானியத்துடன் கூடிய வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.