நீலகிரி : பாதுகாப்புத் துறையில் தனியார் முதலீட்டிற்கு அளிக்கப்பட்ட அனுமதியைக் கண்டித்து நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி : பாதுகாப்புத் துறையில் தனியார் முதலீட்டிற்கு அளிக்கப்பட்ட அனுமதியைக் கண்டித்து நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 1,800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதில், 1,500 பேர் நிரந்தர தொழிலாளர்கள் ஆவர். இந்த நிலையில், பாதுகாப்புத்துறையில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதைக் கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் நேற்று முதல் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையைச் சேர்ந்த நிரந்தர தொழிலாளர்கள் நேற்று முதல் 3 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். 2-வது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிகாரிகளைத் தவிர மற்ற அனைத்துப் பிரிவு தொழிலாளர்களும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால், உற்பத்தி முழுமையாகப் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் காரணமாக, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்திலுள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 1,800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதில், 1,500 பேர் நிரந்தர தொழிலாளர்கள் ஆவர். இந்த நிலையில், பாதுகாப்புத்துறையில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதைக் கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் நேற்று முதல் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையைச் சேர்ந்த நிரந்தர தொழிலாளர்கள் நேற்று முதல் 3 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். 2-வது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிகாரிகளைத் தவிர மற்ற அனைத்துப் பிரிவு தொழிலாளர்களும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால், உற்பத்தி முழுமையாகப் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் காரணமாக, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.