பிரதமர் மோடியின் திருப்பூர் வருகையின் போது பல்வேறு அரசு திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் : வானதி சீனிவாசன் தகவல்

திருப்பூர் : மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதைப் போன்று, பிரதமர் மோடியின் திருப்பூர் வருகையின் போது, பல்வேறு அரசு திட்டங்கள் வெளியாக வாய்ப்பிருப்பதாகப் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதைப் போன்று, பிரதமர் மோடியின் திருப்பூர் வருகையின் போது, பல்வேறு அரசு திட்டங்கள் வெளியாக வாய்ப்பிருப்பதாகப் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட 7 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பா.ஜ.க., பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடியின் திருப்பூர் வருகை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 



கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறியதாவது:- பிப்ரவரி 10-ம் தேதி பிரம்மாண்ட தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி திருப்பூர் வர இருக்கிறார். பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் 2 லட்சம் மக்கள் பங்கேற்பார்கள். இடம் தேர்வு செய்யும் வேலை நடைபெற்று வருகிறது. இன்று மாலைக்குள் இறுதி செய்யப்படும், என்றார். 



பின்னர், கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பை கட்சியின் தலைமை உரிய நேரத்தில் அறிவிக்கும். கூட்டணி தொடர்பான எந்தத் தகவலையும் இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்ள முடியாது. கூட்டணி பற்றி தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் நிலைப்பாடு, இரட்டை நிலைப்பாடு என மக்கள் உணர்ந்து கொள்ள தொடங்கி விட்டார்கள். மோடி ஒழிக என்று கூறுவதை விட, அவர்களுடைய திட்டங்களை சொல்லி வெற்றி பெறலாம். 

தேர்தலில் அரசியல் மாற்றம் என்பது தமிழகத்திலும் இருக்கும். தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும். மதுரைக்கு எய்ம்ஸ் போன்று, அரசாங்கத்தின் திட்டம் தொடர்பான அறிவிப்பு, பிரதமர் மோடியின் திருப்பூர் வருகையின் போது இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்," எனக் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...