அவிநாசி துணை மின்நிலைய டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து : இருளில் மூழ்கிய 13 கிராமங்கள்

திருப்பூர் : அவிநாசி துணை மின்நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்த விபத்தால், 13 கிராமங்களுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் : அவிநாசி துணை மின்நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்த விபத்தால், 13 கிராமங்களுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. 



திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த ஆட்டையாம்பாளையம் துணை மின்நிலையத்தில் ஆயில் கசிவின் காரணமாக ஒரு டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது. இதில், அருகில் இருந்த மற்றொரு டிரான்ஸ்பார்மரும் சேர்ந்து எரிந்தது. இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவிநாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில், விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பிலான 2 டிரான்ஸ்பார்மர்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

இதன் காரணமாக, அவிநாசி, ஆட்டையம்பாளையம், தேவம்பாளையம், சூளை, சாளைபாளையம், ராக்கியாபாளையம் உள்ளிட்ட 13 கிராமங்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. 



இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, இன்று மாலைக்குள் மாற்று துணை மின்நிலையம் மூலமாக 13 கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தனர். முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...