கோவை : பெரியநாயக்கன் பாளையம் வனக்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் பெண் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடப்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : பெரியநாயக்கன் பாளையம் வனக்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் பெண் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடப்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியநாயக்கன் பாளையம் வனக்கோட்டத்திற்குட்பட்ட மூனுகுட்டை பழங்குடியின கிராமப் பகுதியில் யானை இறந்து கிடப்பதாக, பழங்குடியின மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், யானையின் உடலை ஆய்வு செய்தனர். பின்னர், வனத்துறையினரின் கால்நடை மருத்துவக் குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. உயிரிழந்த பெண் யானைக்கு சுமார் 12 முதல் 15 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
பெரியநாயக்கன் பாளையம் வனக்கோட்டத்திற்குட்பட்ட மூனுகுட்டை பழங்குடியின கிராமப் பகுதியில் யானை இறந்து கிடப்பதாக, பழங்குடியின மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், யானையின் உடலை ஆய்வு செய்தனர். பின்னர், வனத்துறையினரின் கால்நடை மருத்துவக் குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. உயிரிழந்த பெண் யானைக்கு சுமார் 12 முதல் 15 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.