கோவை : அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் கேபிள் டிவி புதிய கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி கேபிள் ஆப்பரேட்டர்கள் ஒரு நாள் ஒளிபரப்பு நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
கோவை : அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் கேபிள் டிவி புதிய கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி கேபிள் ஆப்பரேட்டர்கள் ஒரு நாள் ஒளிபரப்பு நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மக்களே சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் புதிய முறையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. அதன்படி, அடிப்படை கட்டணம் ரூ. 155 எனவும், கட்டண சேனல்களை மக்களே தேர்வு செய்து அதற்குரிய கட்டணத்தை செலுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது. இந்த புதிய முறையால் கேபிள் டிவி கட்டணம் ரூ. 500 வரை வசூலிக்க வேண்டி வரும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், தாங்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கேபிள் ஆபரேட்டர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட இந்தியா முழுவதும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கேபிள் ஒளிபரப்பை நிறுத்தி உள்ளனர்.

இது குறித்து கோவை கேபிள் ஆபரேட்டர்கள் கூறியதாவது :- உடனடியாக புதிய கட்டண முறையை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். கேபிள் டிவிக்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் சுமார் 7.5 லட்சம் கேபிள் கனெக்ஷன் உள்ள நிலையில், அரசு கேபிள் கனெக்ஷன் 3 லட்சம் பேரும், எஸ்.சி.வி., டி.சி.சில்., வி.கே. டிஜிட்டல் என பல்வேறு இணைப்புகள் பெற்று உள்ளனர்.
ரூ.150-க்கு எல்லா சேனல்கள் பொதுமக்கள் தாங்களே விரும்பிய சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம் என டிராய் அறிவிப்பின் மூலம் அனைத்து சேனல்கள் பெற ரூ. 700 வரை ஆகும். இதனை வாடிக்கையாளரிடம் பெற முடியாத சூழல் ஏற்படும் என்பதால் பழைய முறையையே பின்பற்ற வேண்டும். இதனை வலியுறுத்தியே அகில இந்திய அளவில் ஒலிபரப்பை நிறுத்தி உள்ளனர். டிராய் தங்களை அழைத்து பேசி இதனை நடைமுறைப்படுத்த 6 மாத காலஅவகாசம் வழங்கி கேபிள் ஆபரேட்டர்களை அழைத்து பேசி, பின்னர் இதனை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை, என்றனர்.
காலை முதல் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதால் தொலைக்காட்சி தொடர் பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மக்களே சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் புதிய முறையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. அதன்படி, அடிப்படை கட்டணம் ரூ. 155 எனவும், கட்டண சேனல்களை மக்களே தேர்வு செய்து அதற்குரிய கட்டணத்தை செலுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது. இந்த புதிய முறையால் கேபிள் டிவி கட்டணம் ரூ. 500 வரை வசூலிக்க வேண்டி வரும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், தாங்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கேபிள் ஆபரேட்டர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட இந்தியா முழுவதும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கேபிள் ஒளிபரப்பை நிறுத்தி உள்ளனர்.

இது குறித்து கோவை கேபிள் ஆபரேட்டர்கள் கூறியதாவது :- உடனடியாக புதிய கட்டண முறையை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். கேபிள் டிவிக்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் சுமார் 7.5 லட்சம் கேபிள் கனெக்ஷன் உள்ள நிலையில், அரசு கேபிள் கனெக்ஷன் 3 லட்சம் பேரும், எஸ்.சி.வி., டி.சி.சில்., வி.கே. டிஜிட்டல் என பல்வேறு இணைப்புகள் பெற்று உள்ளனர்.
ரூ.150-க்கு எல்லா சேனல்கள் பொதுமக்கள் தாங்களே விரும்பிய சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம் என டிராய் அறிவிப்பின் மூலம் அனைத்து சேனல்கள் பெற ரூ. 700 வரை ஆகும். இதனை வாடிக்கையாளரிடம் பெற முடியாத சூழல் ஏற்படும் என்பதால் பழைய முறையையே பின்பற்ற வேண்டும். இதனை வலியுறுத்தியே அகில இந்திய அளவில் ஒலிபரப்பை நிறுத்தி உள்ளனர். டிராய் தங்களை அழைத்து பேசி இதனை நடைமுறைப்படுத்த 6 மாத காலஅவகாசம் வழங்கி கேபிள் ஆபரேட்டர்களை அழைத்து பேசி, பின்னர் இதனை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை, என்றனர்.
காலை முதல் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதால் தொலைக்காட்சி தொடர் பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.