கோவை : நகர்ப்புற வனத்தை உருவாக்கும் திட்டத்தை கோவை மாநகரில் உள்ள சிங்காநல்லூர் குளப்பகுதியில் இந்தியாவின் வனமகன் பத்மஸ்ரீ ஜாதேவ் பயேங் நாளை தொடங்கி வைக்கிறார்.
கோவை : நகர்ப்புற வனத்தை உருவாக்கும் திட்டத்தை கோவை மாநகரில் உள்ள சிங்காநல்லூர் குளப்பகுதியில் இந்தியாவின் வனமகன் பத்மஸ்ரீ ஜாதேவ் பயேங் நாளை தொடங்கி வைக்கிறார்.
தொழில்நகரமான கோவையைச் சுற்றிலும் பெரும்பாலும் வனங்களே நிறைந்துள்ளன. இந்த நிலையில், நகர்ப்புறங்களிலும் வனப்பகுதியை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக, அஸ்ஸாமில் உள்ள பிரம்மபுத்திர நதிக்கரையில் உள்ள மணல் படுகையிலும், மரங்களை நடவு செய்து மாபெரும் வனப்பகுதியை உருவாக்கிய இந்தியாவின் வனமகன் ஜாதேவ் பயேங் கோவை வருகிறார்.

முதற்கட்டமாக, சிங்காநல்லூர் குளத்தின் பகுதியில் மியாவாக்கி முறையில் உருவாக்கப்பட இருக்கும் நகர்ப்புற திட்டத்தை அவர் நாளை தொடங்கி வைக்கிறார். இவர் தொடங்கி வைக்கப்படும் இந்த நகர்ப்புற வன திட்டத்திற்கு 'ஜாதவ ஆரண்யா' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கல்வி மையத்தின் உறுப்பினர்கள், கோவை மாநகராட்சி நிர்வாகம், இந்திய ஆயில் நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து செயல்படுகின்றனர்.
36 ஆண்டுகளாக அஸ்ஸாம் மாநிலத்தில் மணல் படுகைகள் உள்பட 1,360 ஏக்கர் நிலங்களை பசுமை காடுகளாக மாற்றிய, இந்தியாவின் வனமகன் ஜாதேவ் பயேங்கிற்கு, மத்திய அரசு கடந்த 2012-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தொழில்நகரமான கோவையைச் சுற்றிலும் பெரும்பாலும் வனங்களே நிறைந்துள்ளன. இந்த நிலையில், நகர்ப்புறங்களிலும் வனப்பகுதியை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக, அஸ்ஸாமில் உள்ள பிரம்மபுத்திர நதிக்கரையில் உள்ள மணல் படுகையிலும், மரங்களை நடவு செய்து மாபெரும் வனப்பகுதியை உருவாக்கிய இந்தியாவின் வனமகன் ஜாதேவ் பயேங் கோவை வருகிறார்.

முதற்கட்டமாக, சிங்காநல்லூர் குளத்தின் பகுதியில் மியாவாக்கி முறையில் உருவாக்கப்பட இருக்கும் நகர்ப்புற திட்டத்தை அவர் நாளை தொடங்கி வைக்கிறார். இவர் தொடங்கி வைக்கப்படும் இந்த நகர்ப்புற வன திட்டத்திற்கு 'ஜாதவ ஆரண்யா' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கல்வி மையத்தின் உறுப்பினர்கள், கோவை மாநகராட்சி நிர்வாகம், இந்திய ஆயில் நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து செயல்படுகின்றனர்.
36 ஆண்டுகளாக அஸ்ஸாம் மாநிலத்தில் மணல் படுகைகள் உள்பட 1,360 ஏக்கர் நிலங்களை பசுமை காடுகளாக மாற்றிய, இந்தியாவின் வனமகன் ஜாதேவ் பயேங்கிற்கு, மத்திய அரசு கடந்த 2012-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.