திருப்பூர் : திருப்பூரில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ. 1.4 கோடி வழங்க சம்பந்தப்பட்டவர்களுக்கு மாவட்ட மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் : திருப்பூரில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ. 1.4 கோடி வழங்க சம்பந்தப்பட்டவர்களுக்கு மாவட்ட மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015-ம் ஆண்டு கோவை சாலை செம்மியம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனமும் , வேனும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து 4 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் , இந்த விபத்தில் படுகாயம் அடைந்த திருப்பூரை சேர்ந்த குணால் ஜெயின் என்பவருக்கு ரூ. 87 லட்சமும், உயிரிழந்த திருப்பூரைச் சேர்ந்த மகேந்திரனின் தந்தைக்கு ரூ. 17 லட்சமும் வழங்க திருப்பூர் மாவட்ட மக்கள் நீதிமன்றம் மூலம் இன்று சமரசம் செய்யப்பட்டது.

இதற்கான உத்தரவு நகலை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி அல்லி மற்றும் 2-வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி முகமது ஜியாபுதீன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினர்.