கோடநாடு ஆவணப்பட விவகாரம் : சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழக்கு

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து ஆவணப்படம் படத்தின் மூலம் தன் மீது அவதூறு பரப்புவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முதுலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து ஆவணப்படம் படத்தின் மூலம் தன் மீது அவதூறு பரப்புவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முதுலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜன.12: கொடநாடு சம்பவத்தில் எந்தத் தொடர்பும் இல்லாத என் மீது பொய் பரப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு இருப்பதாகவும், விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். 

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொள்ளை முயற்சி மற்றும் படுகொலை குறித்து டெல்லியில் தெகல்ஹா இணைய பத்திரிகை முன்னாள் ஆசிரியர் கடந்த வாரம் ஒரு வீடியோவை வெளியிட்டு பேட்டி அளித்தார். அதில் இச்சம்பவத்துடன் முதலமைச்சரை தொடர்புப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்தார். மேலும், கோடநாடு எஸ்டேட் இல்லத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக மறைந்த ஜெயலலிதாவையும், என்னையும் களங்கப்படுத்தும் வகையில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் கூறப்பட்டுள்ள தகவல் எதுவும் உண்மையல்ல எனக் கூறினார். அதோடு, டெல்லியில் ஒரு வீடியோவை வெளியிட்டு களங்கம் கற்பிக்க முயற்சி செய்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து ஆவணப்படம் படத்தின் மூலம் தன் மீது அவதூறு பரப்புவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முதுலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...