நீலகிரி : வறட்சியின் போது நீலகிரி மாவட்டத்தில் ஏற்படும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த சுமார் 300-க்கும் மேற்பட்ட தற்காலிக தீ தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வனஅலுவலர் சுமேஷ் சோமன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி : வறட்சியின் போது நீலகிரி மாவட்டத்தில் ஏற்படும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த சுமார் 300-க்கும் மேற்பட்ட தற்காலிக தீ தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வனஅலுவலர் சுமேஷ் சோமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது :- நீலகிரி மாவட்டத்தில் உதகை, பார்சன்ஸ்வேலி, குன்னூர், கோத்தகிரி, கோரகுந்தா உள்ளிட்ட 13 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வன சரகங்களில் புலி, சிறுத்தை, காட்டெருமை, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன.
இதுதவிர, பல்வேறு வகையான அரிய வகை மரங்களும், தாவரங்களும் உள்ளன. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து உறைபனி பொழிவு அதிகம் காணப்படுவதால், வனப்பகுதிகளில் உள்ள செடி, கொடிகள், புல்வெளிகள், மரங்கள் காய்ந்து கருகி வருகின்றன. இதனால் காட்டு தீ ஏற்படும் அபாயம் நீடிக்கிறது.

நீலகிரி வனக்கோட்டத்தில் காட்டுத் தீ ஏற்படாத வண்ணம் கண்காணிக்கும் வகையில், தற்காலிகமாக 300 தீ தடுப்பு காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், கொலேரிபெட்டா மலையில் வனத்துறை கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 2 வன ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு, வயர்லெஸ் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து பார்வையிட்டால் பைக்காரா, நடுவட்டம், குந்தா, கோரகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட முடியும்.
இதன்மூலம், வனப்பகுதிகளில் புகை, காட்டு தீ போன்றவை இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிப்பார்கள். இதற்காக மாவட்ட வன அலுவலகத்தில் 24 மணி நேரமும் வயர்லெஸ் ஆபரெட்டர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் வனச்சரகர்களுக்கு தகவல்களைத் தெரிவித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தீயணைப்புத்துறையின் உதவியும் கோரப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது :- நீலகிரி மாவட்டத்தில் உதகை, பார்சன்ஸ்வேலி, குன்னூர், கோத்தகிரி, கோரகுந்தா உள்ளிட்ட 13 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வன சரகங்களில் புலி, சிறுத்தை, காட்டெருமை, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன.
இதுதவிர, பல்வேறு வகையான அரிய வகை மரங்களும், தாவரங்களும் உள்ளன. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து உறைபனி பொழிவு அதிகம் காணப்படுவதால், வனப்பகுதிகளில் உள்ள செடி, கொடிகள், புல்வெளிகள், மரங்கள் காய்ந்து கருகி வருகின்றன. இதனால் காட்டு தீ ஏற்படும் அபாயம் நீடிக்கிறது.

நீலகிரி வனக்கோட்டத்தில் காட்டுத் தீ ஏற்படாத வண்ணம் கண்காணிக்கும் வகையில், தற்காலிகமாக 300 தீ தடுப்பு காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், கொலேரிபெட்டா மலையில் வனத்துறை கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 2 வன ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு, வயர்லெஸ் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து பார்வையிட்டால் பைக்காரா, நடுவட்டம், குந்தா, கோரகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட முடியும்.
இதன்மூலம், வனப்பகுதிகளில் புகை, காட்டு தீ போன்றவை இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிப்பார்கள். இதற்காக மாவட்ட வன அலுவலகத்தில் 24 மணி நேரமும் வயர்லெஸ் ஆபரெட்டர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் வனச்சரகர்களுக்கு தகவல்களைத் தெரிவித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தீயணைப்புத்துறையின் உதவியும் கோரப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.