கோவை : கோவையில் உள்ள பிரபல வணிக மையங்களில் மாநகராட்சி சார்பில் நவீன குப்பைத் தொட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
கோவை : கோவையில் உள்ள பிரபல வணிக மையங்களில் மாநகராட்சி சார்பில் நவீன குப்பைத் தொட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் வீதிகளை அசுத்தம் செய்வதை தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், துய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையைக் கோவை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
ஈரப்பதமான, ஈரப்பதம் இல்லாத குப்பைகளை பிரித்தெடுக்கும் விதமாக இரண்டு பிரிவுகளாகக் கொண்டுள்ள இந்த நவீனக் குப்பைத் தொட்டிகள், மாநகரில் உள்ள பிரபலமான வணிக மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நவீன குப்பைத் தொட்டி ஒன்றின் விலை சுமார் ரூ. 8,500 ஆகும்.

கோவை மாநகராட்சியின் இந்த நடவடிக்கையானது, குப்பைக் கழிவுகளை பிரித்தெடுக்க கடைக்காரர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும், இந்தக் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்களே வந்து எடுத்துச் செல்வார்கள்.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "கோவை மாநகரில் சுமார் 100 டன் எடையளவு குப்பைகளை உருவாக்கும் வணிக மையங்களில், இந்த நவீன குப்பைத் தொட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒப்பணக்கார வீதி, ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, என்.எஸ்.ஆர். ரோடு மற்றும் பிக் பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. நாளடைவில், இந்த நவீன குப்பைத் தொட்டிகள், மேலும் பல இடங்களில் விரிவுபடுத்தப்படும்," என்றனர்.