கோவை: கோவை சரவணம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட காந்திமா நகர் பகுதியில் உள்ள வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 20 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை சரவணம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட காந்திமா நகர் பகுதியில் உள்ள வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 20 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு அருகே உள்ள காந்திமாநகரை சேர்ந்தவர் தேவானந்தன் (51). இவர் பேக்கரி பொருட்கள் தயாரிப்பதற்கான இயந்திரங்களை உற்பத்தி செய்து வருகிறார். இவரது மகனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லை. இதனால் தேவானந்தன் தனது மகனுக்கு ஆயுர்வேத சிகிச்சை கொடுக்க பொங்கலன்று குடும்பத்துடன் கேரளாவுக்குச் சென்றார்.
பின்னர் சிகிச்சை முடிந்து இன்று காலை தனது வீட்டுக்கு வந்த தேவானந்தன் வீட்டின் முன் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 20 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு புகார் அளித்தார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர், தடயவியல் துறையினருடன் சேர்ந்து சோதனை செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கொண்டு போலிசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
கோவை பீளமேடு அருகே உள்ள காந்திமாநகரை சேர்ந்தவர் தேவானந்தன் (51). இவர் பேக்கரி பொருட்கள் தயாரிப்பதற்கான இயந்திரங்களை உற்பத்தி செய்து வருகிறார். இவரது மகனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லை. இதனால் தேவானந்தன் தனது மகனுக்கு ஆயுர்வேத சிகிச்சை கொடுக்க பொங்கலன்று குடும்பத்துடன் கேரளாவுக்குச் சென்றார்.
பின்னர் சிகிச்சை முடிந்து இன்று காலை தனது வீட்டுக்கு வந்த தேவானந்தன் வீட்டின் முன் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 20 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு புகார் அளித்தார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர், தடயவியல் துறையினருடன் சேர்ந்து சோதனை செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கொண்டு போலிசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.