கோவை : வேலாண்டிபாளையம் கூட்டுறவுச்சங்க பொறுப்பாளரை கடத்தி ஆபாசமாகப் படம் எடுத்து பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை சாயிபாபாகாலனி போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை : வேலாண்டிபாளையம் கூட்டுறவுச்சங்க பொறுப்பாளரை கடத்தி ஆபாசமாகப் படம் எடுத்து பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை சாயிபாபாகாலனி போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை, சாயிபாபா காலனி பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார் (51). இவர் வேலாண்டி பாளையம் நகர கூட்டுறவு சங்க செயலாளராக இருந்து வருகிறார். இவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கடத்தல்காரர்கள் கடத்திச் சென்றுள்ளனர். பின் அவரை நிர்வாணமாக்கி, பெண்ணுடன் சேர்த்து புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். இதில் அவரிடம் முதல் கட்டமாக ரூ.25 லட்சத்தை பறித்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக வெளியே சொல்ல அஞ்சிய சரவணக்குமாரை கடந்த 2 ஆண்டுகளாக மிரட்டி ரூ.50 லட்சம் வரை பறித்துள்ளார். இந்நிலையில், கடந்த 18 -ம் தேதி மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால், மன உளைச்சலுக்கு ஆளான சரவணக்குமார் சாயிபாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் சக ஊழியர் நாகராஜ் (43), என்பவரின் உதவியுடன் பைனான்சியர் பத்மநாபன் (42), மற்றும் ஜி.என் மில் பகுதியை சேர்ந்த விஷ்ணு குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சரவணக்குமாரை கடத்தியதும் தொடர்ந்து பணம் பறிப்பில் ஈடுபட்டதும் உறுதியானது. இதையடுத்து, பணப்பறிப்பு கும்பலைச் சேர்ந்த நாகராஜ், பத்மநாபன், விஷ்ணுகுமார் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கார்த்திகேயன் மற்றும் ஐயப்பன் ஆகிய இருவரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கோவை, சாயிபாபா காலனி பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார் (51). இவர் வேலாண்டி பாளையம் நகர கூட்டுறவு சங்க செயலாளராக இருந்து வருகிறார். இவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கடத்தல்காரர்கள் கடத்திச் சென்றுள்ளனர். பின் அவரை நிர்வாணமாக்கி, பெண்ணுடன் சேர்த்து புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். இதில் அவரிடம் முதல் கட்டமாக ரூ.25 லட்சத்தை பறித்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக வெளியே சொல்ல அஞ்சிய சரவணக்குமாரை கடந்த 2 ஆண்டுகளாக மிரட்டி ரூ.50 லட்சம் வரை பறித்துள்ளார். இந்நிலையில், கடந்த 18 -ம் தேதி மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால், மன உளைச்சலுக்கு ஆளான சரவணக்குமார் சாயிபாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் சக ஊழியர் நாகராஜ் (43), என்பவரின் உதவியுடன் பைனான்சியர் பத்மநாபன் (42), மற்றும் ஜி.என் மில் பகுதியை சேர்ந்த விஷ்ணு குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சரவணக்குமாரை கடத்தியதும் தொடர்ந்து பணம் பறிப்பில் ஈடுபட்டதும் உறுதியானது. இதையடுத்து, பணப்பறிப்பு கும்பலைச் சேர்ந்த நாகராஜ், பத்மநாபன், விஷ்ணுகுமார் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கார்த்திகேயன் மற்றும் ஐயப்பன் ஆகிய இருவரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.