கோவை : கோவையில், இளைஞர்களைத் தாக்கியதோடு சாதியைக் குறிப்பிட்டு இழிவுப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் செஞ்சிலுவை சங்கம் எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை : கோவையில், இளைஞர்களைத் தாக்கியதோடு சாதியைக் குறிப்பிட்டு இழிவுப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் செஞ்சிலுவை சங்கம் எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கணபதி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (20). இவர் சென்ற வாரம், கீரனத்தம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் சமீபத்தில் குடியமர்த்தப்பட்ட தனது உறவினர்களை காணச் சென்றுள்ளார். அப்போது அருகிலிருந்த பேக்கரி உரிமையாளரிடம் தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்த சமயத்தில், பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்களை பேக்கரி உரிமையாளர் கடுமையாக தாக்கியதாகவும், சாதிப்பெயரைச் சொல்லி இழிவுப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. எனவே, தாக்கப்பட்ட இளைஞர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பேக்கரி உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரியும், சாதியைச் சொல்லி இழிவுப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும் பல்வேறு முற்போக்கு இயக்கங்களின் கூட்டமைப்பான குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கு.ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த நேருதாஸ், தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த நவீன், திராவிடர் தமிழர் கட்சியைச் சேர்ந்த வெண்மணி மற்றும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கணபதி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (20). இவர் சென்ற வாரம், கீரனத்தம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் சமீபத்தில் குடியமர்த்தப்பட்ட தனது உறவினர்களை காணச் சென்றுள்ளார். அப்போது அருகிலிருந்த பேக்கரி உரிமையாளரிடம் தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்த சமயத்தில், பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்களை பேக்கரி உரிமையாளர் கடுமையாக தாக்கியதாகவும், சாதிப்பெயரைச் சொல்லி இழிவுப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. எனவே, தாக்கப்பட்ட இளைஞர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பேக்கரி உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரியும், சாதியைச் சொல்லி இழிவுப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும் பல்வேறு முற்போக்கு இயக்கங்களின் கூட்டமைப்பான குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கு.ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த நேருதாஸ், தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த நவீன், திராவிடர் தமிழர் கட்சியைச் சேர்ந்த வெண்மணி மற்றும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.