கோவை : எம்.ஜி.ஆரின் 102 -வது பிறந்தநாளை முன்னிட்டு, சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தலைக்கவசம் அணியாமல் சென்றதை கண்டு பலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கோவை : எம்.ஜி.ஆரின் 102 -வது பிறந்தநாளை முன்னிட்டு, சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தலைக்கவசம் அணியாமல் சென்றதை கண்டு பலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எம்.ஜி.ஆரின் 102 -வது பிறந்த நாளை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி ஆறுகுட்டி, எம்.ஜி.ஆர். இளைஞரணியின் செயலர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், விழிப்புணர்வை ஏற்படுத்தச் சென்ற கட்சிக்காரர்கள், சாலை விதிகளை மீறி தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றது தவறான முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

இது பற்றி பேரணியை கண்ணால் கண்ட ஒருவர் கூறும் போது, அரசியல்வாதிகளும், தொண்டர்களும் இது போன்ற விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொள்ளும் போது சாலைவிதிகளை கடைபிடிக்க வேண்டும். பிறர் பின்பற்றும் அளவிற்கு அதனை நடத்த வேண்டும். ஆனால், இந்த பேரணியில் ஒருவர் கூட சாலைவிதிகளை மதிக்கவில்லை. தலைக்கவசம் இல்லாத இந்த போக்கு மற்றவர்களுக்குத் தவறான உதாரணமாக இருக்கும், என்றார்.
எம்.ஜி.ஆரின் 102 -வது பிறந்த நாளை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி ஆறுகுட்டி, எம்.ஜி.ஆர். இளைஞரணியின் செயலர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், விழிப்புணர்வை ஏற்படுத்தச் சென்ற கட்சிக்காரர்கள், சாலை விதிகளை மீறி தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றது தவறான முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

இது பற்றி பேரணியை கண்ணால் கண்ட ஒருவர் கூறும் போது, அரசியல்வாதிகளும், தொண்டர்களும் இது போன்ற விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொள்ளும் போது சாலைவிதிகளை கடைபிடிக்க வேண்டும். பிறர் பின்பற்றும் அளவிற்கு அதனை நடத்த வேண்டும். ஆனால், இந்த பேரணியில் ஒருவர் கூட சாலைவிதிகளை மதிக்கவில்லை. தலைக்கவசம் இல்லாத இந்த போக்கு மற்றவர்களுக்குத் தவறான உதாரணமாக இருக்கும், என்றார்.