நீலகிரி : தேசிய பேரிடர் மேலாண்மை தினத்தை முன்னிட்டு உதகை நிர்மலா மெட்ரிகுலேசன் பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நீலகிரி : தேசிய பேரிடர் மேலாண்மை தினத்தை முன்னிட்டு உதகை நிர்மலா மெட்ரிகுலேசன் பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், ஆண்டு தோறும் ஜனவரி 21 -ம் தேதி பள்ளி மாணவர்களிடம் தீ விபத்து மீட்பு பணி குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இன்று உதகை, பிங்கர் போஸ்ட் நிர்மலா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தீ விபத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, முதலுதவி அளித்தல் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தீயணைப்பு நிர்வாக துறையினர் 10 குழுக்களாகப் பிரித்து, செய்முறை விளக்கம் மற்றும் விழிப்புணர்வு படை, தீ விபத்து ஒலிபெருக்கி குழு, பாதுகாப்பு படை, முதலுதவி குழு, வாகன ஏற்பாடு உள்ளிட்ட பயிற்சியில் ஈடுபடுத்தினர். குறிப்பாக, வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களில் ஏற்படும் எரிவாயு கசிவின் போது நாம் அதை எப்படி எதிர்கொண்டு அணைக்க வேண்டும் என்ற செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், விபத்தின் போது காயமடைந்தவர்களை எவ்வாறு அடையாளம் காணுவது என்பன குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. இதில் ஆசிரியர்களும் பயிற்சியில் பங்கேற்றனர்.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், ஆண்டு தோறும் ஜனவரி 21 -ம் தேதி பள்ளி மாணவர்களிடம் தீ விபத்து மீட்பு பணி குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இன்று உதகை, பிங்கர் போஸ்ட் நிர்மலா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தீ விபத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, முதலுதவி அளித்தல் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தீயணைப்பு நிர்வாக துறையினர் 10 குழுக்களாகப் பிரித்து, செய்முறை விளக்கம் மற்றும் விழிப்புணர்வு படை, தீ விபத்து ஒலிபெருக்கி குழு, பாதுகாப்பு படை, முதலுதவி குழு, வாகன ஏற்பாடு உள்ளிட்ட பயிற்சியில் ஈடுபடுத்தினர். குறிப்பாக, வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களில் ஏற்படும் எரிவாயு கசிவின் போது நாம் அதை எப்படி எதிர்கொண்டு அணைக்க வேண்டும் என்ற செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், விபத்தின் போது காயமடைந்தவர்களை எவ்வாறு அடையாளம் காணுவது என்பன குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. இதில் ஆசிரியர்களும் பயிற்சியில் பங்கேற்றனர்.