கோவை: வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்காகத் தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு புதுப்பித்தல் சலுகை ஜனவரி 24-ம் தேதி நிறைவடைகிறது.
கோவை: வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்காகத் தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு புதுப்பித்தல் சலுகை ஜனவரி 24-ம் தேதி நிறைவடைகிறது.
இன்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிப்பதற்கான அறிக்கையை வெளியிட்டார். அதில் தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்க முயற்சி செய்பவர்களுக்காக கடந்த அக்டோபர் மாதம் 25 -ம் தேதி ஒரு அரசாணை வெளியிட்டது பற்றி எழுதப்பட்டிருந்தது.
அந்த ஆணையின்படி, 2016 -ம் ஆண்டு ஜனவரி 1 -ம் தேதி முதல் அதே வருடம் டிசம்பர் மாதம் 31 -ம் தேதி வரையில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் மீண்டும் தங்களது பதிவினை புதுப்பிக்க சலுகை வழங்கப்படுகிறது.
மேலும், புதுப்பிக்கத் தவறியவர்கள் ஜனவரி 24-ம் தேதி வரை மட்டுமே இணையதளம் வாயிலாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ, வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ புதுப்பித்துக் கொள்ளலாம். அதன் பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிப்பதற்கான அறிக்கையை வெளியிட்டார். அதில் தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்க முயற்சி செய்பவர்களுக்காக கடந்த அக்டோபர் மாதம் 25 -ம் தேதி ஒரு அரசாணை வெளியிட்டது பற்றி எழுதப்பட்டிருந்தது.
அந்த ஆணையின்படி, 2016 -ம் ஆண்டு ஜனவரி 1 -ம் தேதி முதல் அதே வருடம் டிசம்பர் மாதம் 31 -ம் தேதி வரையில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் மீண்டும் தங்களது பதிவினை புதுப்பிக்க சலுகை வழங்கப்படுகிறது.
மேலும், புதுப்பிக்கத் தவறியவர்கள் ஜனவரி 24-ம் தேதி வரை மட்டுமே இணையதளம் வாயிலாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ, வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ புதுப்பித்துக் கொள்ளலாம். அதன் பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.