கோவையில் வரும் பிப்ரவரி 10 -ம் தேதி ஜல்லிக்கட்டு : 350 -க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

கோவை : கோவையில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி வரும் பிப்ரவரி மாதம் 10 -ம் தேதி, 500 -க்கும் மேற்பட்ட காளைகளுடன், 350 -க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெறவுள்ளது.

கோவை : கோவையில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி வரும் பிப்ரவரி மாதம் 10 -ம் தேதி, 500 -க்கும் மேற்பட்ட காளைகளுடன், 350 -க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெறவுள்ளது. 

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையின் போது மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. அதை போலவே, கோவையில், சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு, 'ஓம் கார் ஃபவுண்டேஷன்' சார்பில் சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. பல மாவட்டங்களிலிருந்தும் வந்த ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் போட்டியில் பங்கேற்று, பரிசுகளை வென்றனர்.

பெரும்பாலும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை, சென்ற ஆண்டு கோவை மக்கள் குதூகலத்துடன் நேரில் கண்டுகளித்தனர். இந்நிலையில், பிப்ரவரி மாதம் 10 -ம் தேதி, 500 -க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளும், 350 -க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்குபெறும் ஜல்லிக்கட்டு போட்டி, வெகுவிமரிசயாக நடத்தப்படவுள்ளதாகக் கோவை ஜல்லிக்கட்டு சங்கத்தின் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கோவை ஜல்லிக்கட்டு சங்கத்தின் செயலாளர் கூறுகையில், "நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கோவையைச் சேர்ந்த பல்வேறு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கோவை ஜல்லிக்கட்டு சங்கம், கோவை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டியை, எல் & டி பைபாஸில் உள்ள செட்டிப்பாளையத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. சென்ற வருடத்தைப் போலவே இந்த ஆண்டும் கோவை மக்கள் ஜல்லிக்கட்டை நேரில் பார்க்க ஆர்வத்துடன் உள்ளனர். சிறப்பான முறையில் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது," என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...