திருப்பூரில் குடி போதையில் தம்பியை கொன்ற அண்ணன் கைது

திருப்பூர் : குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் உடன் பிறந்த தம்பியை கொலை செய்த அண்ணனைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் : குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் உடன் பிறந்த தம்பியை கொலை செய்த அண்ணனைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



திருப்பூர் செல்லம் நகர் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவருக்கு பிரகாஷ் மற்றும் விக்னேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவரும் கட்டிட வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இருவரும் முருகம்பாளையம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு மது அருந்தச் சென்றுள்ளனர். 

இதையடுத்து, மது அருந்திக் கொண்டிருக்கும் போதே இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு கைகலப்பாக மாறியதில் பிரகாஷ் தான் வைத்திருந்த பாட்டிலை உடைத்து சகோதரர் விக்னேஷின் கழுத்தில் குத்தியிருக்கிறார். இதில், விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். விக்னேஷ் பலியானதையடுத்து பிரகாஷ் தலைமறைவானார். 

இந்நிலையில், வீரபாண்டி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, தலைமறைவாகியிருந்த பிரகாஷை கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...