கோவை : விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.
கோவை : விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயிகள் பெற்ற கடன்களை ரத்து செய்யக்கோரியும், நாடாளுமன்றத்தில் விவசாயத்திற்கென தனி பட்ஜெட்டை மத்திய அரசு நிறைவேற்றக்கோரியும் தமிழக விவசாயிகள் சங்கத்தின், கோவை மாவட்டக்குழு தலைவர் சு.பழனிசாமி தலைமையிலான விவசாயிகள் குழு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் அதிக பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நீர் தட்டுப்பாடு, தட்பவெப்ப நிலை போன்ற பல்வேறு சவால்களை சந்திக்கும் விவசாயிகள், வாங்கிய வங்கி கடன்களையும், திரும்ப செலுத்த முடியாமல் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே, விவசாயத்தை ஊக்குவிக்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தும் பாரபட்சம் இல்லாமல் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

மேலும், பிப்ரவரி மாதத்தில் கூடும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவசாயத்திற்காக தனி பட்ஜெட் தீர்மானிக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கவும், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யவும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயிகள் பெற்ற கடன்களை ரத்து செய்யக்கோரியும், நாடாளுமன்றத்தில் விவசாயத்திற்கென தனி பட்ஜெட்டை மத்திய அரசு நிறைவேற்றக்கோரியும் தமிழக விவசாயிகள் சங்கத்தின், கோவை மாவட்டக்குழு தலைவர் சு.பழனிசாமி தலைமையிலான விவசாயிகள் குழு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் அதிக பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நீர் தட்டுப்பாடு, தட்பவெப்ப நிலை போன்ற பல்வேறு சவால்களை சந்திக்கும் விவசாயிகள், வாங்கிய வங்கி கடன்களையும், திரும்ப செலுத்த முடியாமல் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே, விவசாயத்தை ஊக்குவிக்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தும் பாரபட்சம் இல்லாமல் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

மேலும், பிப்ரவரி மாதத்தில் கூடும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவசாயத்திற்காக தனி பட்ஜெட் தீர்மானிக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கவும், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யவும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.