கோவை : கோவை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழியல் ஆய்வாளர் சரவணனுக்கு நாஞ்சில் நாடன் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.
கோவை : கோவை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழியல் ஆய்வாளர் சரவணனுக்கு நாஞ்சில் நாடன் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.

கோவையில் சிறுவாணி வாசகர் மையம் கடந்த 2017-ம் ஆண்டு உலக புத்தக தினத்தன்று (ஏப்.,23) தொடங்கப்பட்டது. இதில், ஆண்டுதோறும் படைப்பாளுமையான நாஞ்சில் நாடன் அவர்களின் பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதானது, சமூகம், கலை, எழுத்து, இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் இயங்கும் சிறந்த நபர்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஓவியர் ஜீவாவிற்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான விருதை, தமிழியல் ஆய்வாளர் சரவணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை டி.பாலசுந்தரம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நாஞ்சில் நாடன் கூறியதாவது :- எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகளும், விருதுகளும் பெருமைக்குரியது. தமிழியல் ஆய்வாளர் சரவணனுக்கு என் பெயரில் விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஆய்வுகளை நோக்கிய எழுத்தாளர்களுக்கு, வாசகர் வட்டங்கள் அங்கீகாரங்கள் அளிப்பது எழுத்தாளர்களை ஊக்குவிக்கக்கூடியது, என தெரிவித்தார்.


கோவையில் சிறுவாணி வாசகர் மையம் கடந்த 2017-ம் ஆண்டு உலக புத்தக தினத்தன்று (ஏப்.,23) தொடங்கப்பட்டது. இதில், ஆண்டுதோறும் படைப்பாளுமையான நாஞ்சில் நாடன் அவர்களின் பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதானது, சமூகம், கலை, எழுத்து, இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் இயங்கும் சிறந்த நபர்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஓவியர் ஜீவாவிற்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான விருதை, தமிழியல் ஆய்வாளர் சரவணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை டி.பாலசுந்தரம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நாஞ்சில் நாடன் கூறியதாவது :- எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகளும், விருதுகளும் பெருமைக்குரியது. தமிழியல் ஆய்வாளர் சரவணனுக்கு என் பெயரில் விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஆய்வுகளை நோக்கிய எழுத்தாளர்களுக்கு, வாசகர் வட்டங்கள் அங்கீகாரங்கள் அளிப்பது எழுத்தாளர்களை ஊக்குவிக்கக்கூடியது, என தெரிவித்தார்.
