திருப்பூர் : காங்கயம் காளைகளின் தாய் வீடான காங்கயத்தில், முதன்முறையாக இன்று 300, 200 மீட்டர் தூரங்கள் என இரு பிரிவுகளாக ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது.
திருப்பூர் : காங்கயம் காளைகளின் தாய் வீடான காங்கயத்தில், முதன்முறையாக இன்று 300, 200 மீட்டர் தூரங்கள் என இரு பிரிவுகளாக ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரின் அறப்போராட்டத்தால் தடைகள் தகர்த்து வென்றெடுக்கப்பட்ட சல்லிக்கட்டு தடை நீக்கத்தின் பலனாய் இன்று பாரம்பரிய ரேக்ளா பந்தயங்கள் கொங்கு மண்டலத்தில் பொங்கல் திருநாளை ஒட்டிப் பல பகுதிகளில் நடத்தப்படுகிறது. திருப்பூரில் மாவட்டம், காங்கயத்தில் முதன் முறையாக ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் 450 -க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் கலந்து கொண்டன.

ரேக்ளா பந்தயங்களில் பெரும்பாலும் பயன்படுத்தும் காங்கயம் காளைகளின் தாய் வீடான காங்கயத்தில் முதன்முறையாக இன்று 300, 200 மீட்டர் தூரங்கள் என இரு பிரிவுகளாக ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது. அதன் முறையே 200 மற்றும் 300 மீட்டர் தூரங்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்று எல்லைக் கோட்டை தொட்டன. காங்கயத்தில் நடைபெற்ற இந்த ரேக்ளா போட்டியில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், தாராபுரம், அறவக்குறிச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 450 ஜோடி காளைகள் பங்குபெற்றன.

உடல் வலிமைக்கும் வண்டிபாரம் இழுப்பதற்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள் பந்தய தூரத்தை மின்னலெனக் கடந்து சென்றது பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. காங்கயம் ரேக்ளா குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டிகளை திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொது மக்கள் குடும்பத்துடன் வந்து கண்டு ரசித்தனர். இதுபோன்ற போட்டிகளால், மேற்கு மண்டலத்தில் பாரம்பரிய கால்நடைகள் வளர்ப்பு பெருகும் என காளை வளர்ப்போர் நம்பிக்கை தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரின் அறப்போராட்டத்தால் தடைகள் தகர்த்து வென்றெடுக்கப்பட்ட சல்லிக்கட்டு தடை நீக்கத்தின் பலனாய் இன்று பாரம்பரிய ரேக்ளா பந்தயங்கள் கொங்கு மண்டலத்தில் பொங்கல் திருநாளை ஒட்டிப் பல பகுதிகளில் நடத்தப்படுகிறது. திருப்பூரில் மாவட்டம், காங்கயத்தில் முதன் முறையாக ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் 450 -க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் கலந்து கொண்டன.

ரேக்ளா பந்தயங்களில் பெரும்பாலும் பயன்படுத்தும் காங்கயம் காளைகளின் தாய் வீடான காங்கயத்தில் முதன்முறையாக இன்று 300, 200 மீட்டர் தூரங்கள் என இரு பிரிவுகளாக ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது. அதன் முறையே 200 மற்றும் 300 மீட்டர் தூரங்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்று எல்லைக் கோட்டை தொட்டன. காங்கயத்தில் நடைபெற்ற இந்த ரேக்ளா போட்டியில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், தாராபுரம், அறவக்குறிச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 450 ஜோடி காளைகள் பங்குபெற்றன.

உடல் வலிமைக்கும் வண்டிபாரம் இழுப்பதற்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள் பந்தய தூரத்தை மின்னலெனக் கடந்து சென்றது பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. காங்கயம் ரேக்ளா குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டிகளை திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொது மக்கள் குடும்பத்துடன் வந்து கண்டு ரசித்தனர். இதுபோன்ற போட்டிகளால், மேற்கு மண்டலத்தில் பாரம்பரிய கால்நடைகள் வளர்ப்பு பெருகும் என காளை வளர்ப்போர் நம்பிக்கை தெரிவித்தனர்.