திருப்பூர் : நாட்டிற்கு விரோதமான, பொருளாதாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட்டு நாட்டிற்குப் பலன் தரக்கூடிய கொள்கைகளை ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளர் மாநாட்டில் வலியுறுத்தினார்.
திருப்பூர் : நாட்டிற்கு விரோதமான, பொருளாதாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட்டு நாட்டிற்குப் பலன் தரக்கூடிய கொள்கைகளை ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளர் மாநாட்டில் வலியுறுத்தினார்.
திருப்பூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் இரண்டாவது மாநாடு திருப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளர் அருணாச்சலம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த மாநாட்டில் ஏராளமான வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதுகுறித்து அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளர் அருணாச்சலம் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- மத்திய அரசின் போக்கு என்பது தனித்துறை வங்கிகளை தனியார் வசம் ஒப்படைப்பது என்பது தான். அதனுடைய ஒரு பகுதியாகவே பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகளை இணைக்க வேண்டுமென முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இது நடைபெற்றால் வருகின்ற ஏப்ரல் 1 -ம் தேதி முதல் தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி காணாமல் போய்விடும். இதனால் வங்கி சேவை மிகப்பெரிய அளவில் பாதிக்க கூடும். வங்கியில் இருக்கக்கூடிய ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள். ஏற்கனவே, ஸ்டேட் பாங்க் இந்தியாவோடு அதன் அசோசியேட் வங்கிகள் இணைக்கப்பட்டது. இதன் காரணமாக பல ஆயிரம் கிளைகள் மூடப்பட்டது. இதனால் பல ஆயிரம் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தம் போதாது, பல நாட்கள் வேலை நிறுத்தம் செய்யக் கூடிய சூழ்நிலை ஏற்பட உள்ளது. ஆட்சியாளர்கள் நாட்டிற்கு விரோதமான, பொருளாதாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட்டு நாட்டிற்கு பலன் தரக்கூடிய கொள்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் பேசினார்.
திருப்பூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் இரண்டாவது மாநாடு திருப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளர் அருணாச்சலம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த மாநாட்டில் ஏராளமான வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதுகுறித்து அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளர் அருணாச்சலம் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- மத்திய அரசின் போக்கு என்பது தனித்துறை வங்கிகளை தனியார் வசம் ஒப்படைப்பது என்பது தான். அதனுடைய ஒரு பகுதியாகவே பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகளை இணைக்க வேண்டுமென முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இது நடைபெற்றால் வருகின்ற ஏப்ரல் 1 -ம் தேதி முதல் தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி காணாமல் போய்விடும். இதனால் வங்கி சேவை மிகப்பெரிய அளவில் பாதிக்க கூடும். வங்கியில் இருக்கக்கூடிய ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள். ஏற்கனவே, ஸ்டேட் பாங்க் இந்தியாவோடு அதன் அசோசியேட் வங்கிகள் இணைக்கப்பட்டது. இதன் காரணமாக பல ஆயிரம் கிளைகள் மூடப்பட்டது. இதனால் பல ஆயிரம் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தம் போதாது, பல நாட்கள் வேலை நிறுத்தம் செய்யக் கூடிய சூழ்நிலை ஏற்பட உள்ளது. ஆட்சியாளர்கள் நாட்டிற்கு விரோதமான, பொருளாதாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட்டு நாட்டிற்கு பலன் தரக்கூடிய கொள்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் பேசினார்.